பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு, லஞ்ச வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை, பிரான்ஸ் அதிபராக பதவி வகித்த நிக்கோலஸ் சர்கோசி மீது, மாஜிஸ்திரேட்டுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. பாரீஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சர்கோசி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்படுவதாக, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 2 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் எனவும், ஒரு ஆண்டு வீட்டுச் சிறையில் இருக்கலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வீட்டுச் சிறையில் இருக்கும் போது, அவரது உடலில் கண்காணிப்பு சிப் பொருத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து, நிக்கோலஸ் சர்கோசி மேல்முறையீடு செய்வார், என எதிர்பார்க்கப்படுகிறது.