மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பஸ்தாவில் புட்டு, இட்லியில் பர்கர்,
வேப்பிலை அல்லவா என அசத்தியிருந்தனர். இந்த திருவிழாவில் இயக்குனர் அமீர் முதல் ஆளாக உணவை ருசித்தார்.
மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுசாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் நேற்று முதல் செப். 17-ம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவானது நேற்று இரவு 8.00 மணிக்கு தொடங்கியது. 25 உணவுக் கலைஞர்களைக் கொண்டு 65 வகையான தென் இந்தியா, வட இந்தியா, இத்தாலி, சைனீஸ் உள்ளிட்ட பன்னாட்டு உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தனர்.
வ.உ.சிதம்பரத்தின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கௌரவப்படுத்த இந்த உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உணவு திருவிழாவில் வ.உ.சிதம்பரத்தில் மகன் வழி பேத்தியுமான செல்வி முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வ.உ.சிதம்பரத்தின் பேத்தியான செல்வி முருகானந்தம் இந்த உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த உணவுத் திருவிழாவில் வேப்பிலை அல்வா, பாதாம் இலையில் அல்வா, பாஸ்தாவில் புட்டு, இட்லியில் பர்கர், கவுனி அரிசி கஞ்சி, பச்சை காய்கறிகள், பழங்கள், இத்தாலி கான்டினெண்டல் உள்ளிட்ட உணவு வகைகளை இந்திய
உணவுகள் செய்முறையிலும், வெளிநாட்டு உணவுகளை இந்திய முறைப்படியும் ஒப்பிட்டு
செய்திருந்தனர்.
இனிப்புகள் வகையில் உள்ளூர் முதல் வெளியூர் வரை சாக்லேட்டுகள், கேக்குகள், கமரக்கட்டு, மாஸ்மெல்லோ என நூற்றுக்கணக்கான வகையிலும் செய்து காட்சிப்படுத்திருந்தது அங்கே வந்திருந்தவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செஃப் கோர்ஸ் கிரேசி என்ற தலைப்பிற்கு இணையாக பல்வேறு வேடங்கள் அணிந்து சமைத்த உணவை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவும் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டலில் தங்கி இருந்த நடிகரும் பிரபல இயக்குனருமான அமீர் கலந்து கொண்டு முதல் ஆளாக உணவை ரசித்து உண்டார்.







