பாகிஸ்தானில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மின்கட்ட ரசீதை எரித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளைச் சார்ந்துள்ளது.மின்சாரத்தின் விலை வெறும் 15 மாதங்களில் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிஐ ஆட்சிக் காலத்தில் ஒரு யூனிட்டுக்கு 16 ஆக இருந்த மின்சாரக் கட்டணம் இந்த ஆண்டு யூனிட்டுக்கு 68 ஆக உயர்ந்துள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, பல நகரங்களில் பொதுமக்களும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்போது இந்த விவகாரம் பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வருல்-ஹக் கக்கரிடம் உள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்ந்துள்ளதால் சிரமத்திற்கு ஆளான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.