விமானத்தில் பிசினஸ் கிளாசில் நாய் ஒன்று ஹாயாக குட்டித்தூக்கம் போடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் இருந்தாலே தனி சுகம் தான். அவை வீடுகளில் சுற்றி சுற்றி வரும்போது குழந்தைகள் விளையாடுவதை போன்ற உணர்வை தரும். குறிப்பாக தனிமை விரும்பிகளுக்கு நாய் இருந்தால் பொழுது போவதே தெரியாது. அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு ஜீவன் என்றால் அது நாய் தான் என எளிதாக கூறலாம். உங்களுடன் விளையாடுவது மட்டுமின்றி நீங்கள் வெளியே செல்லும் போது ஒரு சிறந்த பாதுகாவலனாக நாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தான் பலர் நாய்களை தங்கள் குழந்தை போல் கவனித்து வருகின்றனர்.
ஆம். செல்லப்பிராணி மீது உயிரை வைத்துள்ள ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள வீடியோ லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது. என் பிசினஸ் கிளாஸ் சாய்வு இருக்கையை யாரோ திருடிவிட்டார்கள் என்ற தலைப்புடன் வீடியோ தொடங்குகிறது. உள்ளே சென்று பார்த்தால், பறக்கும் விமான பெட்டில் அழகான நாய் ஒன்று போர்வை போர்த்தியபடி குட்டித்தூக்கம் போடுகிறது. அருகில் பொம்மை ஒன்று காணப்படுகிறது. தயவு செய்து நாயை எழுப்பி தூக்கத்தை கலைத்துவிடாதீர்கள் என்றும், அப்பாடா இதுபோன்ற சொகுசு தூக்கம் யாருக்கும் கிடைக்காது என்றும் இணைய வாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.