தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி ரயில்களில் பயணிக்க இன்று டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு
செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ரயில்வே நிர்வாகம் பொதுவாக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்குவதுண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9 ஆம் தேதி பயணம் செய்ய நேற்று முன்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து நவம்பர் 10 வெள்ளிக்கிழமை பயணம்
செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ரயில்வே நிலைய
கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட்
முன்பதிவு செய்தனர். தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்கள் செல்லும் இரயில்களில் இரண்டாம் வசதி படுக்கை டிக்கெட் முன்பதிவு துவங்கி சில நிமிடத்திற்குள்ளாக ஏறத்தாழ அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு
செல்லக்கூடிய விரைவு இரயில்களான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி
எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய
விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் விற்பனை தொடங்கிய 2
நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல கூடிய
ரயில்களிலும் 10 நிமிடத்திற்குள் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
நவம்பர் 11 ம் தேதி பயணத்திற்கு நாளை ஜூலை 14 ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு
செய்யலாம். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கி
இருக்கும் நிலையில் சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட்
முன்பதிவு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.