#Diwali | திருநெல்வேலி – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளி பண்டிககைக்கு திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி – தாம்பரம்…

தீபாவளி பண்டிககைக்கு திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே மதுரை கூட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – தாம்பரம்

திருநெல்வேலி – தாம்பரம் இடையே நவ.3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது திருநெல்வேலி, சேரன் மகாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம்,விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் – திருநெல்வேலி

மறுமார்க்கம் தாம்பரம் – திருநெல்வேலி இடையே நவ.5 திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.