மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதன் பிறகு, 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய முதலமைச்சர், “கொரோனா தொற்று பரவலால் புத்தக கண்காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாக இருந்தது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பபாசிக்கு எனது நன்றி” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும், இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்தார்.
செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவுக் கோயில்களை கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு எனவும், மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
மேலும், “இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய 1.50 லட்சம் புத்தகங்களை, இலங்கை யாழ்ப்பாணம் நூலகம் தொடங்கி பல ஊர்களில் இயங்கும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். என்னுடைய 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை அதில் நான் பதிவு செய்திருக்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.
சென்னை புத்தகக்காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.