முக்கியச் செய்திகள்இந்தியா

டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம்!

டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன .  அதன்படி மே.7 ஆம் தேதி 3 ஆம் கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது.  அதேபோல டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 25 அன்று நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அர்வீந்தர் சிங் லவ்லி இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  மேலும்   அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்தார்.

 

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது..

” காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த  உண்மையை வடகிழக்கு டெல்லி வேட்பாளர் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை.” என அரவிந்த் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் ஏற்கெனவே பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில் அந்த பதவியிலும் தொடர்வார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி பந்துவீச்சு, அஸ்வினுக்கு வாய்ப்பில்லை

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Web Editor

“அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” – மநீம

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading