கொல்லம் – சென்னை விரைவு ரயிலில் விரிசல் ஏற்பட்ட நிலையில் துரித நேரத்தில் கண்டுபிடித்த ஊழியருக்கு பாரட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கொல்லம்-சென்னை அதிவிரைவு ரயில் இருந்த விரிசலை உரிய நேரத்தில் கண்டுபிடித்து மிகப் பெரிய விபத்தை தவிர்த்த ரயில்வே பணியாளருக்கு பாதுகாப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செங்கோட்டை, தென்காசி வழியாக சென்ற கொல்லம் அதிவிரைவு வண்டியானது, செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்த போது ரயிலை வழக்கமாக சோதனை செய்யும் ரயில் பெட்டி பராமரிப்பாளரான ரகுபதி என்பவர் ரயில் பெட்டிகளை சோதனை செய்துள்ளார்.
அப்போது, கொல்லம்-சென்னை விரைவு ரயிலில் பொருத்தப்பட்டிருந்த எஸ் – 3 பெட்டியின் அடிப்பாகத்தில் மிகப்பெரிய அளவிலான விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த மிகப்பெரிய அளவிலான விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், உரிய நேரத்தில் பெட்டியை பரிசோதனை செய்து ரயில் பெட்டியில் இருந்த விரிசலை கண்டுபிடித்த ரயில் பெட்டியின் பராமரிப்பாளரான ரகுபதி என்பவரை இன்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நேரில் அழைத்து ரகுபதிக்கு ரூ. 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாதுகாப்பு விருது வழங்கி கௌரவித்தார்.
ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான நிலையில் கொல்லம் ரயிலில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக கண்டறிந்ததன் மூலம் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.