அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை 2 வது முறையாக நீட்டித்து சென்னஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை 2 வது முறையாக நீட்டித்து சென்னஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடையாற்றில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மாதம் 14-ந் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்து அதன் பிறகு காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை 2வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.