29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொடரும் கனமழை | மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக 5வது நாளாக கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்கம், புதுவையில் படவலாக பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக, வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி செல்கின்றனர்.  சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக 5வது நாளாக கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கடல் சீற்றத்தின் காரணமாக 28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 5 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதன் காரணமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading