தொடர் உயிர்பலி வாங்கும் கிணற்றை மூடக் கோரி சேலம் மாவட்டம் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் நாகம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், லாயவண்யா தம்பதியினரின் இளைய மகன் யாதித். இவர் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார் இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த நண்பர்களோடு விளையாடி வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மகன் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த பெற்றோர்கள் அவரின் நண்பர்களுடன் விசாரித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யாதித்தின் நண்பர்கள் அவர் மீன் பிடிக்க கிணற்றுக் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். விரைந்து வந்து பார்த்த பெற்றோர் தன்னுடைய மகனின் ஆடைகள் மட்டும் கிணற்றின் அருகாமையில் இருந்ததாகவும் நம்மை ஏமாற்றுவதற்காக மறைந்து உள்ளதாகவும் அரை மணி நேரமாக பெற்றோர்கள் கிணற்றின் அருகாமையிலேயே காத்து கிடைத்துள்ளனர்நண்பர்களோடு வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கால் இடறி சிறுவன் தண்ணீரில் தத்தளிக்கவே தன்னுடன் வந்த நண்பர்கள் செய்வதறியாது ஓடிவிட்டனர் , என்று சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு மற்றும்
மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்
சுமார் ஒருமணி நேரம் போராடி சிறுவனை சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து விசாரித்தில் இந்த கிணற்றில் பாதி அளவு தரை அமைந்துள்ளதாகவும்
ஆர்வத்தில் சிறுவர்கள் அருகில் இருக்கும் சிறு சிறு மீன்களை பிடிக்க
வருவதாகவும் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று உயிரிழப்பு ஏற்படும் போது மட்டும் கிணற்றை மூடுவதாக தெரிவித்து ஏமாற்றி வரும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கிணற்றில் ஐந்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரிவயர்கள் வரை 9 பேர் ஏற்கனவே இறந்துள்ளதாகதெரிவித்தனர் இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கூடிய விரைவில் கிணற்றை மூட நடவடிக்கை மேற்கொள்வதாக
தெரிவித்தனர் .