வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்துவது என்பது தேவையற்றது எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
15 சதவிகித உள் ஒதுக்கீடு கேட்ட நிலையில் 10.5 சதவிகிதம் கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்தோம் எனத் தெரிவித்த ராமதாஸ், நியாயமான கோரிக்கைகளை ஒரு சிலர் எதிர்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். முன்னதாக பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கும் சாதி வாரி கணக்கெடுப்புக்கும் சம்பந்தமில்லை எனக் கூறினார். தமிழ்நாடு அரசு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்று தரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.