தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அந்த விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் உரை நிகழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், பலருக்கும் பல்வேறு விருதுகளை வழங்கினார்.
முதலமைச்சரிடம் இருந்து கல்பனா சாவ்லா விருது பெற்ற எழிலரசி, “கோயிலுக்குச் சென்றபோது குளத்தில் வழுக்கி விழுந்து தவித்தவர்களை பிடித்து இழுத்து மீட்க முயற்சி செய்தேன். எனக்கும் நீச்சல் தெரியாது. ரொம்ப நேரம் 2 பசங்களையும் பிடித்துக்கொண்டே இருந்தேன். ஊர்மக்கள் வந்து எங்களை காப்பாற்றினர்.” என்றார்.
மாநில இளைஞர் விருது பெற்ற சிவரஞ்சனி, “இந்த விருதானது பெண்களுக்கானதாக மட்டுமல்ல, அங்கீகாரமாக பார்க்கிறேன். 2015 முதல் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகிறேன். வருங்கால சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக இந்த முயற்சி.” என்றார்.
இளைஞர் விருது பெற்ற விஜயகுமார், “உக்ரைன் போரின்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டேன். விருதுக்காக எதையும் செய்யவில்லை. தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். முன்னாள் மாணவர்கள் இணைந்து தமிழக மாணவர்களுக்கு உதவிகள் மேற்கொண்டோம்.
மாநில இளைஞர் விருது பெற்ற முகமது ஆசிக் கூறுகையில், “ஜீவா சாந்தி அறக்கட்டளை என்ற பெயரில் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் மத நண்பர்களும் இணைந்து கோவை மாவட்டம், நீலகிரி மாவட்ட பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற சடலங்கலை எடுத்து நல்லடக்கம் செய்து இதுவரை 12,000 க்கும் மெறப்பட்ட சடலங்களை எடுத்து நல்லடக்கம் செய்ததற்காக மாநில இளைஞர் விருது பெற்றிருக்கிறேன். இந்த விருதினை வழங்கி இருக்கும் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.