முதலமைச்சர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் பிரதமர் மோடி என்றும் மதுரை வரும் பிரதமரை தமிழ்நாடு மக்கள் வரவேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார், அனைவரும் அவரோடு சேர்ந்து கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு தற்போது வரவேற்பு அளிப்பதில் இருந்தே, மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று, என்று செல்லூர் ராஜு விமர்சித்தார்.