தேர் விபத்து; குடியரசுத் தலைவர் இரங்கல்

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி…

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 94-வது ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக களிமேடு பகுதியில் தேர் சென்றபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து. இதனால், தேரில் பற்றிய தீயில் சிக்கிய 11 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி: அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு UGC-க்கு கடிதம் – அமைச்சர் பொன்முடி 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம் என குறிப்பிட்டுள்ளார்.

அன்புரிக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.