மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய, ஸ்பைஸ் ஜெட் விமானம் சரியான நேரத்திற்கு வராததால், பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
கோவாவில் இருந்து சென்னை வழியாக மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம்,
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவாவில் இருந்து புறப்படவில்லை.
இதனால், மதுரையில் இருந்து 12 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய
பயணிகள், நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஸ்பைஸ்
ஜெட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படாததால்,
பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சில பயணிகளுக்கு பணத்தை திரும்ப அளிப்பதும், ஒரு சில பயணிகளை வேறு விமான சேவை நிறுவனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்