தமிழகம், புதுவையில் ஜனவரி 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. டிசம்பர் தொடக்கத்தில் உருவான மிக்ஜாம் புயலாலும், தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையாலும் பல பாதிப்புகள் ஏற்பட்டன.
அதன்பின்னர் அதை தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. பல பகுதிகளிலும் மிதமான அளவிலேயே மழை பெய்து வருகிறது.







