பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் சட்டப் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது
ஆண்கள் ஈட்டும் வருமானம் டாஸ்மாக்குக்கும், பெண்கள் ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கும் செல்கிறது என்ற பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய வானதி சீனிவாசன், ஆண்கள் கைக்கு வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும் எனக் கூறினார். ஆனால், பெண்கள் கைக்கு வரும் பணம் முழுக்க முழுக்க குடும்ப செலவுக்கு பயன்படுகிறது என சுட்டிக்காட்டினார்.
அண்மைச் செய்தி: ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்; திறந்து வைத்தார் முதலமைச்சர்
வானதி சீனிவாசன் சொன்ன கருத்துக்கு பேரவையில் இருந்த ஆண் உறுப்பினர்கள் குரல் எழுப்பி சத்தம்போட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய வானதி, தாம் அனைவரையும் குறிப்பிடவில்லை என்றும், யாரும் கொதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். உடனடியாக குறுக்கிட்ட பேசிய சபாநாயகர், யாரும் கொதிக்கவில்லை, அனைவரும் அமைதியாகதான் உள்ளனர் என குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சரின் பேச்சுக்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை முதலமைச்சரும், நிதியமைச்சரும் தெரிவிப்பதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆண்டு மட்டும் 24% வரி வருவாய் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.