ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை பவானி தேவி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான அரையிறுதி சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி, இந்தியா சார்பில் கலந்து கொண்டார். போட்டியின் அரைஇறுதி சுற்றில் பவானி தேவி, உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய பவானி தேவி 14-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் 3வது இடத்தை வென்று பவானி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம் ஆசியவாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி. இதற்கு முன் நடைபெற்ற கால் இறுதிசுற்றில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
மிசாகிஎமுரா கடந்த 2022-ம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைவெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இது மிசாகிக்கு எதிராக பவானி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதுகுறித்து பவானி தேவி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
அந்த காணொலியை காண: