மிக பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்; பொன்னியின் செல்வன் படக்குழுவினரை வாழ்த்திய நடிகர் சூர்யா

மிக பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள் என பொன்னியின் செல்வன் படக்குழுவினரை நடிகர் சூர்யா வாழ்த்தியுள்ளார்.  புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு  இயக்குநர் மணிரத்னம்  பிரமாண்டமாக உருவாக்கிய படம்தான் பொன்னியின் செல்வன். …

மிக பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள் என பொன்னியின் செல்வன் படக்குழுவினரை நடிகர் சூர்யா வாழ்த்தியுள்ளார். 

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு  இயக்குநர் மணிரத்னம்  பிரமாண்டமாக உருவாக்கிய படம்தான் பொன்னியின் செல்வன்.  இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது.

https://twitter.com/Suriya_offl/status/1651784338202296320?s=20

இந்நிலையில், நடிகர் சூர்யா படக்குழுவினரை வாழ்த்தி தனது ட்விடரில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், மணி சார் மற்றும்  பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! அற்புதமான நடிகர்கள் மற்றும்  பெரிய மற்றும் வலிமையான பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.