அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல், மூன்று கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்ட தேர்தல் அட்டவணையின்படி, அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மூன்று கட்ட தேர்தலிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.