அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 3 கட்டங்களாக நடைபெறும்

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல், மூன்று கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்ட தேர்தல் அட்டவணையின்படி, அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக…

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல், மூன்று கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்ட தேர்தல் அட்டவணையின்படி, அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மூன்று கட்ட தேர்தலிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.