28.6 C
Chennai
May 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பரந்தூர் விமான நிலைய விவகாரம்-திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை அறிக்கை

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தன் வினையே தன்னைச்சுடும் என்று ஆளும் திமுக அரசு உணர்ந்துவிட்டது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

8 வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது. 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக அரசு, பரந்தூர் மக்களுக்கு தரும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள்? என்பதை அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?

பரந்தூர் மக்களுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை, மாற்று குடியிருப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும். அனைத்தையும் வழங்கிவிட்டு இடத்தை கேட்கலாம்.

2006-ல் தந்த 2 ஏக்கர் நிலம் இலவசம் என்ற வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றித் தர வேண்டும். இனியும் அரசியல் லாபத்துக்காக மக்களை திசைதிருப்பாமல் தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும்.

திருவாரூரில் ONGC-இன் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதை முதலமைச்சரின் கனிவான கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading