முக்கியச் செய்திகள்தமிழகம்

“தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை கடந்த 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.  இதன்  விசாரணை இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில்,  எத்தனை பேருந்துகளில் படிகட்டுகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது? என்பது குறித்து தமிழக உள் துறை செயலாளர்,  போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் அரசு,  தனியார் பேருந்துகளில் படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர்ந்து நடைபெறுமா?

Dinesh A

வேறு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாயை புகழ்வேன்: டி ஆர் பாலு

Web Editor

மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading