நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி (85) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அஜித்குமார் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: நமது கண்ணெதிரே வாழ்கின்ற தெய்வத்தை இழந்து விட்டு ஆறுதல் கூற முடியாத நிலையில் இருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







