இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

சட்டமன்றத் தேர்தலையொட்டி இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை…

சட்டமன்றத் தேர்தலையொட்டி இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேளாண் துறை இணை செயலாளராக பணியாற்றிவரும் ஆனந்த், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக பணியாற்றிவரும் அஜய் யாதவ் ஆகியோர், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், அஜய் யாதவ் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.