ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரனை தொடர்ந்து சூரியதை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம்ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது.
பின்னர் புவி சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து வரும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை உயரம் முதல் முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா விண்கலம் 459 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருவதாகவும், செப்டம்பர் 5ஆம் தேதி மீண்டும் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.