நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் ஸ்மார்ட் வாட்ச், செல்போன் கொண்டு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு மேலாக தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்தந்த தொகுதிகளை சார்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலை 6 மணி முதல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தொகுதி சார்பில் வாகனங்கள் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள மாணவ மாணவிகளிடம் இருந்த ஸ்மார்ட் வாட்ச், செல்போன் அகியவை அரங்கத்தின் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அரங்கத்திற்குள் சென்றதும் நிகழ்ச்சி அரங்கத்தின் கதவு மூடப்பட்டது.