முக்கியச் செய்திகள்இந்தியா

வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 36 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை, மைசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ஜூன் 23 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செகந்திராபாத் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் :

சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூர் இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 12697/12698) ஜூன் 21 முதல் ஜூலை 7 வரை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மைசூரிலிருந்து தர்பங்காவுக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாகச் செல்லும் பாக்மதி விரைவு ரயில் ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜூன் 28, ஜூலை 5 தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23, 30 தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து பகத் கி கோதி செல்லும் விரைவு ரயில் ஜூன் 24, ஜூலை 1 தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜூன் 27, ஜூலை 4 தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை-பிகானேர் (ராஜஸ்தான்) இடையே இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரயில் ஜூன் 20, 27, ஜூலை 4 தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜூன் 23, 30, ஜூலை 7 தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜபல்பூர்- மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20, 27, ஜூலை 4 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜூன் 22, 29, ஜூலை 6 தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கேரளத்தின் கொச்சுவேலி, எர்ணாகுளம் மற்றும் கர்நாடகத்தின் பெங்களூர், யஷ்வந்த்பூரிலிருந்து பாட்னா, பாடலிபுத்திரம், பிலாஸ்பூர், இந்தூர், கோர்பா, தானாப்பூர், தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதை மாற்றம் :

டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ராஜ்தானி அதிவிரைவு ரயில் ஜூலை 3, 5 தேதிகளில் பாலர்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் ஜூலை 2, 3, 4 தேதிகளில் பாலர்ஷா வழியாக செல்வதற்கு பதிலாக வாராங்கல், பேடப்பள்ளி, நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

Vandhana

தோளில் பாம்புடன் மது வாங்கச் சென்றவர் – மதுக்கடையில் அலறி அடித்து ஓடிய கூட்டம்!

Web Editor

கோயில் ஊர்வலத்தில் மிரண்டு ஓடிய யானையால் பொதுமக்கள் பீதி

Jayasheeba

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading