ஜோகன்னஸ் பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தியுள்ளது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா முதல் முறையாக வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் ஜோகன்னஸ் பெர்க் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 229 ரன்களை எடுத்தது.
தென்னாப்பிரிக்காவை விட 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 266 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் டீன் எல்கர் 96 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நிலைத்தார்.
இந்நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. செஞ்சூரியனில் வீழ்த்தப்பட்ட தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ் பெர்க்கில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் இந்நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.