தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
- “மாணவர்கொல்லி நீட் தேர்வை ஒழிப்பது மட்டும் தான் ஒரே தீர்வு” – அன்புமணி!
- இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
- 2வது டி20 : வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
- ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
- “விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அப்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




