நிவர் புயலால் பெரிய பாதிப்பில்லை: முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை…

தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply