தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
- “கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
- தேமுதிகவில் விருப்பமனு அளிக்க 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
- “உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல்படுகிறது” – நயினார் நாகேந்திரன்!
- நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
- “கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது” – செல்லூர் கே.ராஜு விமர்சனம்!
அப்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.







