தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
- கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!
- “கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி
- கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
- இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!
- “நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்
அப்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வேளச்சேரி, தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




