மதுரவாயல் அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என இளைஞர் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை அடுத்த போரூரில் உள்ள விடுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பள்ளியில் படித்த பிரதாப் என்பவர் தன்னை காதலித்ததாகவும், தற்போது தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்து தன்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். திருமணம் செய்யவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து மதுரவாயல் போலீசார் அந்த நபரை அழைத்து விசாரணை செய்ய உள்ளனர். ஒரு தலை காதல் விவகாரமா? அல்லது இருவரும் காதலிக்கிறார்களா என்பது குறித்து அந்த நபரை நேரில் அழைத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக இளைஞர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.