இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மேற்கொண்டார். அப்போது தொழிலாளர்கள் அணியுடான கூட்டத்தில் பேசிய அவர், கந்து வட்டி கொடுமை தலை விரித்து ஆடுவதாகவும், பல கொள்ளைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், தமிழகம் ஊழல், மணற்கொள்ளை மற்றும் மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பது போன்றவற்றில் முதலிடத்தில் உள்ளது என விமர்சித்தார்.







