29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

மார்க் ஆண்டனி படத்துக்காக நான் செய்த செயல்….! -எஸ்.ஜே. சூர்யா சுவாரஸ்ய தகவல்…

மார்க் ஆண்டனி படம் குறித்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா சென்ன தகவல் இனையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோக்களுள் ஒருவர், விஷால். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், புதிதான கதை கொண்ட படங்களில் நடிக்க தயங்குவதில்லை. அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான், மார்க் ஆண்டனி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகீரா, செம உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில பிரபலமான இயக்குநர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை டைம் ட்ராவல் கதையில் நடிக்க வைத்த படம்தான், மார்க் ஆண்டனி. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போல ஒரு பெண் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியான போதே ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தனர்.

படம், நேற்று முந்தினம் செப்.15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் எஸ்.ஜே. சூர்யா 5 குரல் மாற்றங்களில் பேசியிருப்பார். அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டங்களில் வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தமிழில் 12 நாள்களும் தெலுங்கில் 13 நாள்களுமாக மொத்தம் மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் பேசியுள்ளேன். ஏனெனில் படத்துக்கு அவ்வளவு தேவைப்பட்டது. அதற்கான வரவேற்பும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading