மார்க் ஆண்டனி படம் குறித்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா சென்ன தகவல் இனையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோக்களுள் ஒருவர், விஷால். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், புதிதான கதை கொண்ட படங்களில் நடிக்க தயங்குவதில்லை. அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான், மார்க் ஆண்டனி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகீரா, செம உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில பிரபலமான இயக்குநர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை டைம் ட்ராவல் கதையில் நடிக்க வைத்த படம்தான், மார்க் ஆண்டனி. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போல ஒரு பெண் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியான போதே ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தனர்.
படம், நேற்று முந்தினம் செப்.15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் எஸ்.ஜே. சூர்யா 5 குரல் மாற்றங்களில் பேசியிருப்பார். அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டங்களில் வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தமிழில் 12 நாள்களும் தெலுங்கில் 13 நாள்களுமாக மொத்தம் மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் பேசியுள்ளேன். ஏனெனில் படத்துக்கு அவ்வளவு தேவைப்பட்டது. அதற்கான வரவேற்பும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.