பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ. 15 லட்சம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவல்லிக்கேணி, பெசன்ட் சாலை, NKT. தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : ஆண்டுதோறும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தோறும் 234 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். கிராமப்புறங்களில் இலவச சைக்கிள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மகளிர் உரிமை தொகை 80 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பாஜக மாநில
தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் தருவோம் என்றார்களே 15 ரூபாயாவது கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்துப பேச அருகதை
இல்லை என்றும் உதயநிதி குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.