“என்ன தெரிகிறது”… ரூ.9 கோடிக்கு ஏலம் போகும் வெள்ளை தாள்!

ஜெர்மனியில் ராபர்ட் ரேமன் வரைந்த வெறும் வெள்ளைத்தாள் ஓவியம் ரூ.9 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ளது.  அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த ஓவியர் ராபர்ட் ரேமென். இவர் வெள்ளை நிற பெயிண்டிங் வரைவதில் சிறந்து விளங்கியவர் என்று…

"What does it look like"… the white paper will be auctioned for Rs.9 crore!

ஜெர்மனியில் ராபர்ட் ரேமன் வரைந்த வெறும் வெள்ளைத்தாள் ஓவியம் ரூ.9 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த ஓவியர் ராபர்ட் ரேமென். இவர் வெள்ளை நிற பெயிண்டிங் வரைவதில் சிறந்து விளங்கியவர் என்று கூறப்படுகிறது. இவர் 1970ம் ஆண்டு வரைந்த வெள்ளை நிற கேன்வாஸ் ஒன்று ஜெர்மனியில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளநிலையில், ரூ.9 கோடிக்கு ஏலம்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது வெற்று தாளாக இருந்தாலும் இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், இது ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் மற்றொரு ஓவியக்கலைஞர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள் : #Fengal புயல் பாதிப்பு – கடலூர், புதுச்சேரியில் இன்று மத்திய குழு ஆய்வு!

ராபர்ட் ரேமன் இந்த ஓவியத்தை ஜெனரல் 52″ x 52″ என்ற தலைப்பில் வரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் பார்க்கும் போது இந்த கேன்வாஸ் காலியாகத் தோன்றலாம். இருப்பினும், இது வெள்ளை பற்சிப்பியால் வரையப்பட்டுள்ளது, இது எண்ணெய் மற்றும் நிறமிகளுடன் கலந்த கண்ணாடி தூசியை உள்ளடக்கிய ஒரு ஊடகமாகும். இந்த ஓவியம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. ராபர்ட் ரேமென் (88) கடந்த 2019-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.