32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாங்க ‘சிங்கள்’ ! இணைய உலகை கலக்கி வரும் ‘பேரிக்காய்’ ஈமோஜி

சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள சிங்கிள்ஸ்கள் தங்கள் உறவு நிலையைக் குறிக்க அவர்களது இன்ஸ்டாகிராம் பயோவில் பேரிக்காய் ஈமோஜியை வைக்கத் தொடங்கியுள்ளனர். திடீரென ஏன் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் ? முழு விவரத்தினை கீழே பார்ப்போம்.

நீங்கள் இன்னும் தனிமையில் இருக்கிறீர்களா ? அல்லது டேட்டிங் பயன்பாடுகளால் மிகவும் மனமுடைந்து சோர்வடைந்துள்ளீர்களா ? உடனடியாக உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பேரிக்காய் ஈமோஜியை வைக்க வேண்டிய நேரம் இது . இந்த வாசகம் தான் தற்போது
இணைய உலகை கலக்கி வருகிறது. சரி, ஆனால் அதை நாம் ஏன் செய்ய வேண்டும்? காரணம், உலகெங்கிலும் உள்ள சிங்கிள்ஸ்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பயோவில் பேரிக்காய் ஈமோஜியைச் சேர்ப்பதன் மூலம் தங்கள் உறவு நிலையை வெளிப்படுத்தி, சரியான வாழ்க்கை துணையை அவர்களால் தேர்வு செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் தான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘Pear’என்ற நிறுவனம் துவங்கியுள்ள இந்த சமூக பரிசோதனையின் வாயிலாக பரப்பப்படும் இந்த தகவலின் மூலம், சிங்கிள்ஸ்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் ஆத்ம துணையை, சரியாக கண்டுபிடிக்க உதவுவதே இதன் நோக்கமாகும். குறிப்பாக பலர் தங்கள் வாழ்க்கைத்
துணையைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் சிங்கிள்ஸ்ஸா அல்லது காமிட்டடா என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த சமயங்களில் இந்த ஈமோஜி அவர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் எளிதாக அவர்களை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது. சிலர் பேரிக்காய் மோதிரங்களை அணிந்துகொண்டு தனிமையில் இருப்பதாக தங்களை காட்டிக் கொள்ளும்போது, நேரடியாகவே அவர்களிடம் தங்களின் விருப்பத்தை கேட்டு தெரிந்துக் கொள்ள இந்த பேரிக்காய் அடையாளம் பெரிதும் உதவுகிறதாம்.

இருப்பினும் சமூக வலைதளங்களில் நடக்கும் இந்த புதிய சோதனை டேட்டிங் உலகில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த புதிய சோதனைகளைப் பார்க்கும்போது, ​​எதிர்காலத்தில் மேரேஜ் பீரோக்கள், மேரேஜ் பார்ட்னர்களின் வேலை குறையும் என்றும், இனி சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய முழுவதுமாக மக்கள் தயாராகி வருவதாகவும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பரிசோதனையின் வாயிலாக “உலகம் முழுவதும் உள்ள 1.2 பில்லியன் சிங்கிள்கள் தாங்கள் தனிமையில் இருப்பதைக் காட்ட தங்கள் விரலில் பச்சை நிற மோதிரத்தை அணிந்திருந்தால், எங்களுக்கு டேட்டிங் ஆப்ஸ் தேவைப்படாது” என்று கூறும் அந்த நிறுவனம், இந்த சமூக பரிசோதனையானது தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் நேரலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading