போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் | அவர்கள் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கைகள் என்னென்ன?…

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவர்கள் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்… தமிழ்நாடு அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு…

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவர்கள் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்…

தமிழ்நாடு அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் எனவும் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்த அடிப்படையில் 812 பேரை போக்குவரத்து ஊழியர்களாக பணி நியமனம் செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு போக்குவரத்து கழகத்தின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.