கல்லறையிலிருந்து எழுந்திருக்க முயன்றால் அந்த நபரின் தலை தானாகவே துண்டிக்கும் வகையில் கத்தியை கழுத்தைச் சுற்றி பொறுத்தியுள்ளனர்.
டோரு நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்லறையைக் கண்டுபிடித்துள்ளனர், அதில் ஒரு ‘பெண் காட்டேரி’ அடக்கம் செய்யப்பட்டது. ரத்தம் உறிஞ்சும் ஆவி அல்லது மனித சதையை உண்ணும் பேய் பற்றிய கருத்து பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு நாகரிகத்தின் புராணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் ஒவ்வொருவிதமாகக் கூறப்பட்டுவருகிறது. ஆரம்பக்கால காட்டேரிகள் குறித்த கருத்துகள் அக்காடியன்கள், சமாரியர்கள், அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் நூல்களிலிருந்து உருவாகியது. அதில் அவர்கள் லிலு மற்றும் லிலிட்டு என்ற அமானுஷ்ய உருவங்களை காட்டேரிகளேடு ஒப்பிடுகின்றனர். பின் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல ஐரோப்பிய இனக் குழுக்களின் வாய்மொழி மரபுகள் மற்றும் கதைகள் மேற்கத்திய நாடுகள் முழுவதும் பரவியது. அந்த கதைகளில் காட்டேரிகளாக இரவில் உலாவும் அமானுஷ்ய உருவங்கள் தீய மனிதர்கள், உயிரை மாய்த்துக் கொண்டவர்கள், சூனியக்காரர்கள், தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சடலங்கள் அல்லது காட்டேரி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பல வடிவில் கதைகள் பரவியது.18 ஆம் நூற்றாண்டின் போது, கிழக்கு ஐரோப்பா முழுவதும் காட்டேரிகள் குறித்த அச்சமும் பதற்றமும் உச்சத்தை அடைந்தது, இதனால் பலரைச் சந்தேகத்தாலும் அச்சத்தாலும் கொன்று குவிக்கும் நடைமுறை ஏற்பட்டதால் அந்த காலகட்டத்தை “18 ஆம் நூற்றாண்டு வாம்பயர் சர்ச்சை” என்று குறிப்பிடப்படுகிறது.இந்நிலையில், தற்போது வடக்கு போலந்தில் உள்ள பைட்கோஸ்கிஸ் என்ற நகருக்கு அருகில் புதைக்கப்பட்டதைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெண் காட்டேரியின் சமாதி ஒன்றைக் கண்டுபிடித்தனர். இதுகுறித்த ஒரு மானுடவியல் ஆய்வில், அந்த பெண்ணுக்கு முன் பற்கள் நீண்டுகொண்டிருந்ததை மேற்கோள் காட்டுகிறது.இதனால் 17 ஆம் நூற்றாண்டில் மூடநம்பிக்கை கொண்ட உள்ளூர் மக்கள் அப்பெண்ணைச் சூனியக்காரி அல்லது காட்டேரி என்று நம்பி அப்பெண்ணைக் கொன்றதோடு அப்பெண் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற பயத்தில் ஒரு வளைந்த கத்தி போன்ற கூர்மையான இரும்பு தகட்டினால் அப்பெண்ணின் கழுத்தைச் சுற்றிப் பதித்துள்ளனர். அத்துடன் இடது காலில் ஒரு பூட்டு கொண்டு அப்பெண் காலை பூட்டியுள்ளனர்.மேலும் நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாரியஸ் பாலின்ஸ்கி கழுத்தைச் சுற்றி பொறுத்தியுள்ள கத்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒருவேலை அந்த பெண் மீண்டும் கல்லறையிலிருந்து எழுந்திருக்க முயன்றால் அந்த நபரின் தலையைத் தானாகவே துண்டிக்கும் வகையில் அந்த கத்தியை அவர் கழுத்தைச் சுற்றி பெறுதியிருக்கிறார்கள் என்று விளக்கினார்.17 ஆம் நூற்றாண்டில் ஒரு ஆடம்பரப் பொருளாகக் கருதப்படும் பட்டுத் தொப்பியுடன் அந்த பெண் புதைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இறந்தவர் ஒரு உயர்ந்த சமூக அந்தஸ்தைக் கொண்டிருந்தவராக வாழ்ந்தவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.இதற்கு முன்பு கிராகோவில் தோண்டியெடுக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலைகளுடன் கூடிய பல எலும்புக்கூடுகள் மற்றும் காமி போமோர்ஸ்கியில் வாயில் செங்கல்லை வலுக்கட்டாயமாகத் திணித்துப் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைக் கொண்ட காட்டேரிகளின் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன். அந்த வகையில் போலந்தில் கண்டெடுக்கப்பட இந்த கத்திகளால் பிணைக்கப்பட்ட சமாதி புதுவகையான காடேரிகளின் சமாதி எனக் குறிப்பிடுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்