கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல்
மலைப்பகுதியில் , கடந்த ஒரு சில நாட்களாகவே மாலை நேரங்களில் தொடர்ந்து
மழை பெய்து வருகிறது. இதனால், கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து வெகுவாக
அதிகரித்து , தற்போது சீராக நீர்வரத்து இருந்து வருகிறது. இதன் காரணமாக,
பெரியகுளம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் , சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக இருந்து வந்த நிலையில்,
கும்பக்கரை அருவியில் சீரான நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகளை
வெகுவாக கவர்ந்து வருகிறது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் , இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகமாக
இருந்து வந்த நிலையில் , தற்போதும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து
வருகிறது. இதனால், கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வருகின்ற நீர் ,
குளிர்ச்சியாக கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், அருவியில்
குளித்து விட்டு செல்வதற்காக வந்தோம் . கொட்டும் அருவியில் குளிப்பது மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் உள்ளதென கூறினர்.
—கு.பாலமுருகன்