சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா கடந்த 2020 ஜுலை மாத்தில் ஏவப்பட்டது. இது கடந்த பிப்ரவரி 18ல் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இந்த நிலையில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. அதற்கான புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளது. நாசா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆறு சக்கரங்களை கொண்ட இந்த ரோவர் 6.5 மீட்டர் வரை 33 நிமிடங்களில் வெள்ளிக்கிழமை பயணித்துள்ளது. அதே போல 150 டிகிரி திரும்பி, 2.5 மீட்டர் வரை திரும்பி வந்துள்ளது. தனது பயண அச்சை படமெடுத்து அதை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன் அனுப்பும் திட்டத்தில் இந்த வெற்றியானது ஒரு புதிய மைல்கல் என பெர்சவரன்ஸ் ரோவரை வடிவமைத்ததில் முக்கிய நபரான அனெய்ஸ் ஸரிஃபியன் எனும் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை தொடர்ந்து, நீண்ட காலம் இயங்கும் தன்மைக்கொண்ட ரோவர்களை உருவாக்க முயன்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது. ஒரு சரிவான நீண்ட பயணத்திற்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டமிடல் ஒருவேளை அடுத்த சனிக்கிழமை வெற்றிகரமாக இந்த பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் நாசா கூறியுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 200 மீட்டரை இந்த ரோவர் நகர்கிறது. செவ்வாய் கிரகத்தின் ஒரு நாள் என்பது பூமியின் ஒரு நாளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவரை விட ஐந்து மடங்கு வேகமானது இந்த பெர்சவரன்ஸ் ரோவர். செவ்வாய் கிரகத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தரையிறங்கிய கியூரியாசிட்டி ரோவர் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.
இந்த கிரகத்தில் முதன்முதலாக ஒரு ட்ரோனை பறக்க வைக்க தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெர்சவரன்ஸ் ரோவர் திட்டத்தின் துணை பணி மேலாளர் ராபர்ட் ஹாக் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை எவ்வித பிரச்னைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் வெற்றியடைந்தால் மனித குல வரலாறு மேலும் ஒரு படி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.







