குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது தான் அதிமுகவின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இன்று ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த ராயபுரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். அப்போது சி.ஏ.ஏ தொடர்பாக மாநில அரசு முடிவெடிக்க முடியாது என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் நிலைப்பாடு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது தான் என விளக்கம் அளித்தார்.







