விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முதியவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக்நகர் நல்லாகுப்பம் குதியைச் சேர்ந்தவர் பெருமாள் (68). பெயிண்டர். இவரது மனைவி குமுதா. வீட்டு வேலை செய்து வருகிறார். பெருமாள் வேலைக்கு செல்வதில்லை.
இன்று மதியம் அவரது மகன் லோகேஷ் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது பேன் ஊக்கில் வேஷ்டியால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் பெருமாள் கிடந்தார். அதிர்ச்சியடைந்த மகன் லோகேஷ் தந்தையை காப்பாற்றி மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே பெருமாள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து குமரன் நகர் போலீசார் வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமரன் நகர் போலீசார் இறந்து போன பெருமாளின் பாக்கெட்டில் இருந்த கடிதத்தில் கைப்பற்றினர். அதில், “இந்த முடிவை நான் எடுத்ததற்கு என் சொந்த காரணம் எதுவுமில்லை, விவசாயிகள் குளிர், மழையிலும் போராடி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே” என்று எழுதி வைத்திருந்தார். குமரன் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







