டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு; பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை!

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, பள்ளிகளை நவம்பர் 10ஆம் தேதி வரை மூட ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில்…

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, பள்ளிகளை நவம்பர் 10ஆம் தேதி வரை மூட ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.

இது குறிப்பாக ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகளுக்கு இது வழிவகுக்கிறது.  இதனால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, தொடக்கப் பள்ளிகளை நவம்பர் 10ஆம் தேதி வரை மூட ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

இத்தகவலை டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி சமூக வலைதளமான X இல் பதிவிட்டு தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் தனது பதிவில், மாசு அளவு அதிகமாக உள்ளது, எனவே டெல்லியில் ஆரம்ப பள்ளிகள் நவம்பர் 10 வரை மூடப்படும் என்று எழுதினார். 6-12 ஆம் வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதற்கு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://twitter.com/AtishiAAP/status/1721023652177563976

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.