29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா-பெசன்ட் நகர் இடையே ரோப்கார் சேவை!

சென்னை கலங்கரை விளக்கம் – பெசண்ட் நகர் இடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போகுவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலமாக இந்தியாவில் 10 இடங்களில் ரோப் கார் சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், தமிழ்நாட்டில் அடுத்தகட்டமாக சென்னை கலங்கரை விளக்கம் – பெசண்ட் நகர் இடையே 4.6 கிமீ நீளத்திற்கு ரோப் கார் சேவை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு ரோப்வே அமைப்புகளை ஆய்வு செய்து அமைக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தேவை, புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் கொடைக்கானல் – பழனி இடையே ரோப் கார் சேவை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading