அமலாக்கத்துறை தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்று அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது சிறப்பு இயக்குநர் ராகுல் நவின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் அமலாக்க இயக்குனரகத்தின் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ உத்தரவு வெள்ளிக்கிழமை வெளியானது. சஞ்சய் குமார் மிஸ்ரா ED இயக்குநராக சுமார் 4 ஆண்டுகள் 10 மாதங்கள் பணியாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யார் இந்த ராகுல் நவீன்?
ராகுல் நவீன் 1993 பிரிவு ஐஆர்எஸ் அதிகாரி. பீகாரைச் சேர்ந்த ராகுல் நவீன் சிறப்பு இயக்குனராக மட்டுமல்லாமல், ED தலைமையகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். புதிய இயக்குநரை முறைப்படி நியமிக்கும் வரை அவர் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 15ம் தேதி வரை பதவியில் இருக்க அனுமதி வழங்கப்பட்டது:
ஜூலை 31-ம் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், அவர் அக்டோபர் 15ஆம் தேதி வரை பதவியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அப்போது கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, செப்டம்பர் 15ம் தேதி வரை அவர் பதவியில் நீடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.