31 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பிறகு, ‘பேரறிவாளன் விடுதலை’ என்ற செய்தியை கேட்ட பேரறிவாளனின் தயார் ஆனந்த கண்ணீரில் பேரறிவாளனை கட்டி தழுவி தன்னுடையை மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
தீர்ப்பு வெளியான போது நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பிரசாந்த் பேரறிவாளன் இல்லத்திற்கு சென்று பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற முயற்சி செய்தார். அப்போது, பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்தது, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் தழும்புகளை ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர் அதனை நமது ஒளிப்பதிவாளர் பிரத்யேகமாக காட்சிப்படுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அறையில், இருந்த பேரறிவாளனின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ் அமைப்பினரும் அவரோடு இணைந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆனந்த கண்ணீர் சிந்தினர். பேரறிவாளனை கட்டி அணைத்தபடி உறவினர் ஒருவர் பேரறிவாளன் மார்பில் சாய்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து, வீட்டில் இருந்த இனிப்பை பேரறிவாளனுக்கு உறவினர்களும் பரஸ்பரமாக ஊட்டிவிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நெகிழ்ச்சியான காட்சிகளை நியூஸ் 7 தமிழ் பொதுமக்களுக்கு பிரத்யேகமாக காட்சிப்படுத்தியது.
அண்மைச் செய்தி: ‘பேரறிவாளன் விடுதலை; 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்தது’
தொடர்ந்து, பேரறிவாளன், தனது தாயார் அற்புதம்மாள், தமிழ் அமைப்பினர் உள்ளிட்டோருடன் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, தீர்ப்பு தொடர்பாக நமது செய்தியாளர் பிரசாந்த் கேள்வி எழுப்பினர். அதற்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இந்த தீர்ப்பு அனைவருக்கும் கிடைத்த வெற்றி எனவும் நெகிழ்ச்சிபடக் கூறினார்.
தொடர்ந்து, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த பேரறிவாளன் தாயார், “மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை” எனக் கூறினார். நீண்ட சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட அற்புதம்மாள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தாமதமாக கிடைத்துள்ளது என்பதையும் பதிவு செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.