முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுகளுக்கு இனி இடமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புதன்மை குறித்து சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுகளுக்கு இனி இடமில்லை என தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்கான கதவுகள், மதகுகள், நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றில் இருந்த அனைத்து தேவைகளும் பழுதுகளும் சரி செய்யப்பட்டுவிட்டது எனவும் இன்னும் இருக்கக்கூடிய சிறுசிறு வேலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் என உச்சநீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.