முக்கியச் செய்திகள்இந்தியாInstagram News

அம்மாவுக்கு என்னை பிடிக்காது, அப்பா திட்டுகிறார்…’ | மனதை நொறுக்கும் 4 வயது குழந்தையின் அழுகை!

அம்மாவுக்கு என்னை பிடிக்காது, அப்பா திட்டுகிறார் என தென் கொரிய ரியாலிட்டி ஷோவான ‘மை கோல்டன் கிட்ஸ்’ நிகழ்ச்சியில் 4 வயது குழந்தையின் வலியைக் கேட்டு அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

தென் கொரியாவின் பிரபல ‘மை கோல்டன் கிட்ஸ்’ ரியாலிட்டி ஷோவின் 169 எபிசோட் நவம்பர் 21, 2023 அன்று ஒளிபரப்பப்பட்டது. அப்போது ​​குறிப்பிட்ட ஒரு பகுதி கிளிப் சிறிது நேரத்திற்குப் பிறகு வேகமாக வைரலானது. இந்தக் காணொளியில், நான்கு வயதுடைய கியூம் ஜி-யூன் தனது பெற்றோர் தன்னுடன் விளையாடுவதும் இல்லை, தன்னுடன் சரியாகப் பேசுவதும் இல்லை என்று கூறுகிறார். இதற்குப் பிறகு அவர் அழத் தொடங்குகிறார். இதை பார்த்த பார்வையாளர்கள் ஆத்திரமடைந்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ச்சியான வேலை மற்றும் சோர்வு காரணமாக அவளது பெற்றோர் இருவரும் தன்னுடன் விளையாடுவதில்லை என்பதை கியூம் ஜி-யூன் வெளிப்படுத்தினார். தனது கருத்தை வெளிப்படுத்திய அவர், ‘அப்பாவின் கோபம் என்னை பயமுறுத்துகிறது. என் தந்தை என்னிடம் அன்பாகப் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார். கெயமிடம் அம்மாவைப் பற்றிக் கேட்டபோது, ​​அவர் அமைதியாகி, சிறிது நேரம் நிறுத்திவிட்டு – ‘அம்மாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது’ என்றார்.

மேலும், நான் கலைப் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் என் தோற்றம் நன்றாக இல்லை என்று என் அம்மா கூறினார் என அந்த சிறுவன் கூறியதும்,, இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் இதயம் நொறுங்கியது. நிகழ்ச்சியை பாரத்த அனைவரும் அத்தகைய பெற்றோருக்கு எதிராக எதிர்வினையாற்றத் தொடங்கினர். மேலும், குழந்தையின் பெற்றோரின் இத்தகைய கவனக்குறைவு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ராஜஸ்தானில் முடிவுக்கு வந்தது இழுபறி – முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!

Web Editor

தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா

Web Editor

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி..! 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading