நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா
30-க்கும் மேற்பட்டஉள்ளான் வகைகள் வரி தலைவாத்துஉள்ளிட்ட பறவைகள்
ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.
பறவைகள் சரணாலயத்தில் தற்போது அடிக்கடி மழை பெய்வதாலும், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்லில் நிலவுவதால் இந்த ஆண்டு தற்போது கூட்டம், கூட்டமாக பறவைகள் அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண்
கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில்
காணலாம்.